முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதய் திட்டம்

 உதய் மின் திட்டம் - உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா (Ujwal DISCOM Assurance Yojana (UDAY)
Ø பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களின் மின் விநியோகத் திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையை குறைக்கவும் ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா (உதய்) என்ற திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது.
Ø இத்திட்டத்தை அப்போதைய மத்திய மின்துறை அமைச்சராக இருந்த பியூஸ்கோயல் தொடங்கிவைத்தார். நவம்பர் – 2015.
Ø ‘2015 செப்டம்பர் வரை மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
Ø இத்திட்டத்தில் இணைந்த முதல் மாநிலம் – ஜார்கண்ட் ஜனவரி - 2016
Ø இத்திட்டத்தில் மிக முக்கிய அம்சமான காலாண் டுக்கு ஒருமுறை மின் கட்டண மாறுதல் செய்யும் நிபந்தனையை நீக்க வேண்டும், தமிழக அரசு வெளியிடும் நிதிப் பத்திரங்களின் முதிர்வு கால அளவு 15 ஆண்டு களாக இருக்க வேண்டும் என்ற திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் ‘உதய் திட்டத்தில் சேர தமிழக அரசு முடிவு செய்தது.
Ø 21 வது மாநிலமாக தமிழ்நாடு இணைந்த நாள் – ஜனவரி 08 – 2017.
Ø டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலும், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணியும் கையெழுத்திட்டனர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
ü இத்திட்டத்தின்கீழ், வட்டித் தொகையில் சேமிப்பு, தொழில் நுட்பம், வணிக ரீதியான இழப்பு, மின்சாரத்தை கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பைக் குறைத்தல்.
ü பயனுள்ள வகையில் எரிசக்தி, நிலக்கரி சீர்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் போன்றவைகளால் தமிழகம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த நிகர பயன்களைப் பெறும்.
ü ‘உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதின் மூலம் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) 75 சதவீத கடன் தொகையான ரூ.30,420 கோடியை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். மீதமுள்ள கடனுக்கு தற்போதைய வட்டி விகிதத்தில் இருந்து 3 முதல் 4 சதவீதம் குறைவான சலுகை விலையில் மறுவிலை நிர்ணயிக்கவோ அல்லது மாநில அரசு உறுதிப் பத்திரங்களை வெளியிடவோ இத்திட்டம் வழிவகை செய்கிறது.
ü கடன் குறைப்பு மற்றும் மீதமுள்ள கடன் மீதான குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மூலம், வருடாந்திர வட்டித் தொகையில் சுமார் ரூ.950 கோடி அளவுக்கு சேமிக்க இயலும்.
ü தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பு மற்றும் மின்சாரத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் இழப்பை முறையே 13.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் ‘டான்ஜெட்கோவுக்கு கூடுதலாக ரூ.1,601 கோடி வருவாய் கிடைக்கும்.
Ø தற்போது வரை 27 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
Ø கடைசியாக இணைந்த 27 வது மாநிலம் – மிசோரம்
Ø இத்திட்டத்தில் இணைந்துள்ள யூனியன் பிரதேசங்கள் – அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர்ஹோலி, டாமன்-டையு, இலட்சத்தீவுகள்
(பிப்ரவரி 28 – 2018).

Ø ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்கள் இத்திட்டத்தில் இணையவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...