முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

PRADHAN MANTRI JAN DHAN YOJANA

ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana):
Ø வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்.
Ø பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்டு 15/  2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.
Ø பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 28/ 2014 ல் புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
Ø இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாதகோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது.
Ø இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு .டி.எம். கார்டு வழங்கப்படும்.
Ø ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும்.
Ø ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
Ø ஆயுள் காப்பீடு தொகை 30,000 ரூபாய். கணக்கு தொடங்கிய, ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் வரைவு தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகையை முறையாகத் திருப்பிச் செலுத்தினால், 15 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும்
Ø ஏழைகளுக்காக துவங்கப்பட்ட இந்த கணக்கில் இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 500, மற்றும் 1000 இந்திய ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது இந்த கணக்குகளில் மட்டும் 87,000 கோடி ரூபாய் சட்டவிரோதமான பணம் வைப்பு வைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
Ø 4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போது காலவரையின்றி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
Ø ஜன் தன் யோஜனா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
Ø இதில், 32 கோடியே 41 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. அவற்றில் ரூ.81 ஆயிரத்து 200 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
Ø கணக்கு வைத்திருப்பவர்களில் 53 சதவீதம்பேர் பெண்கள். 83 சதவீத கணக்குகள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன.
Ø வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்கப்படுத்துவதற்காக, இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்தஓவர்டிராப்ட்வசதி, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
Ø இதில் 2000 ரூபாயை எவ்விதமான கட்டுப்பாடும், நிபந்தனையும் இல்லாமல் பெறலாம்.
Ø இந்த ஓவர்டிராப்ட் சேவை பெற அடிப்படைத் தகுதியாக இருப்பது வயது. தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் வயது வரம்பை 60இல் 65ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

Ø மேலும் இத்திட்டத்தில் கணக்கு துவங்குவோருக்கு RuPay டெபிட் கார்டு உடன் இணைக்கப்பட்ட விபத்து காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதுவரை காப்பீட்டு அளவு 1 லட்சமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது இதன் அளவு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...