முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 06 - 2018

நடப்பு நிகழ்வுகள்
ஆகஸ்ட் 06 – 2018
v தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
Ø இதன் தலைமை அதிகாரியாக குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி A.ஜாகீர் உசேன் நியமனம்.
v ஆக்சிடோசின் என்ற மருந்தை தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லரை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத்துறை.
v கென் – பெட்வா, கோதாவரி – காவிரி, நர்மதை - தபதி, டாமன், கங்கை- பிஞ்சால் உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
v உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ள மாநிலம் – ஆந்திரபிரதேசம்.
v சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் இ-விசா வசதியை 165 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் K.J.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
v பாம்பு கடித்து இறந்தால் ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநிலம் – உத்திரபிரதேசம்
v இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ள மாநிலம் – மணிப்பூர் (மேற்கு இம்பால்)
v ஹார்ன் நாட் ஓகே (Horn not ok – சத்தம் வேண்டாம்) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் சஹீர் நஹின் (சத்தம் வேண்டாம்) என்ற கைபேசி செயலியை தொடங்கியுள்ள மாநிலம் – இமாச்சலப்பிரதேசம்
v வடக்கு இரயில்வேயின் டெல்லி கோட்டம் கொசு ஒழிப்பு சிறப்பு இரயில் வண்டியை தொடங்கியிருக்கிறது.
v வாஷிங்க்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றவர் – ஜெர்மனி வீரர் அலெக்ஸ்சாண்டர் வெரேவ்
v ஒலிபரப்புதல் வளர்ச்சிக்கான ஆசியா- பசிபிக் நிறுவனத்தின் புதிய தலைவர் – பயஸ் ஷெஹர்யார்.
v யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளராக S.கோபகுமார் நியமனம்
v சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – ஹீலுவாடி ஜி ரமேஷ்.
v உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – ராஜிவ் சர்மா
v ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – இந்திரஜித் மஹந்தி
v மும்பை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – N.H.பட்டீல்
v ஒலியை போல் 5 மடங்கு வேகமாக செல்லும் ஜிஞ்சாங்-2 என்ற போர் விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாடு – சீனா
v உலகின் ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட்டை சீனாவின் மூலக்கூறு தாவர அறிவியலின் சிறப்பு மையம் வடிவமைத்துள்ளது.
v சர்வதேச மரம் அறுக்கும் போட்டியை நடத்திய நாடு – நார்வே
v தாமாக அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோர்க்கு மரண தண்டனை வழங்கும் கடும் சட்டத்தை கொண்டுவரவுள்ள நாடு – வங்கதேசம்
v சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில், கனடா அரசு தலையிட்டதால் சவுதி அரேபிய அரசு கனடா அரசுடனான உறவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது.

v ராபர்ட் எஃப் கென்னடி மனித உரிமை விருதை பெறுபவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...